வானத்தையும் பூமியையும் வார்த்தையினால் படைத்தவரே | Vaanathaiyum poomiyaiyum vaarthaiyinaal padaiththavare | Tamil Lyrics
Ravi Bharath • Aayathamaa 4
#208
Font
Chorus
வானத்தையும் பூமியையும் வார்த்தையினால் படைத்தவரே
செங்கடலை பிளந்து யோர்தானை கடந்து
எரிகோ கோட்டையை உடைத்தவரே
குருடர்கள் பார்க்கவும் செவிடர்கள் கேட்கவும்
மரித்தவர் உயிரோடெழும்ப செய்தவரே
உம் வல்லமையை நினைத்தே
வியக்கிறேன் தெய்வமே
வல்லமையின் தேவனே விண்ணுலகின் வேந்தனே
வாக்குமாறா தெய்வமே இயேசுவே
Verse 1
மண்ணை எடுத்து மனுஷன் உண்டாக்கி
மூச்சு காத்துல கடலை ரெண்டாக்கி
பாவி மனுஷன விடுதலையாக்கி
மறுபடி வருவீர் அதுமட்டும் பாக்கி
Verse 2
பாதாளம் கூட தெறந்திருக்குது
உமக்கு முன்னால பயந்திருக்குது
வான மண்டலம் விரிஞ்சு நிக்கிது
நீரே தேவன்னு அறிஞ்சு நிக்குது
Verse 3
உம்மை கண்டதும் மலைகள் ஆடுது
சமுத்திரங்கூட பயந்து ஓடுது
தூதர் கூட்டமும் நடுங்கி நிக்குது
நீங்க வந்தவுடன் ஒதுங்கி நிக்குது
Verse 4
உமக்கு முன்னாடி பேச முடியுமா
எதுக்கு இப்படின்னு கேக்க முடியுமா
உமது வழிகள அறிய முடியுமா
உமது யோசன புரிய முடியுமா
------x------x------x------
Chorus
Vaanathaiyum poomiyaiyum vaarthaiyinaal padaiththavare
Sengadalai pilandhu yorthaanai kadanthu
Eriko kottaiyai udaiththavare
Kurudarkal paarkkavum sevidharkal ketkkavum
Mariththavar uyirodezhumba seidhavare
Um vallamaiyai ninaiththe
Viyakkiren theivame
Vallamaiyin thevane vinnulagin venthane
Vaakkumaara theivame Iyesuve
Verse 1
Mannai eduthu manushan undaakki
Moochu kaathula kadalai rendaakki
Paavi manushan vidudhalaiyaakki
Marubadi varuveer adhumattum paakki
Verse 2
Paadhaalam kooda therandhirukkudhu
Umakku munnaala payandhirukkudhu
Vaana mandalam virinju nikkidhu
Neere devannu arinju nikkudhu
Verse 3
Ummai kandadhum malaigal aadudhu
Samudhirangkooda payandhu odudhu
Thoothar koottamum nadungi nikkudhu
Neenga vandhavudan odhungi nikkudhu
Verse 4
Umakku munnaadi pesa mudiiumaa
Edhukku ippadinu kekka mudiiumaa
Umadhu vazhigala ariya mudiiumaa
Umadhu yosana puriya mudiiumaa