உலகை இரட்சிப்பவரே | Ulagai iratchippavare | Tamil Lyrics
Ravi Bharath • Aayathamaa 3
#186
Font
Chorus
உலகை இரட்சிப்பவரே
உன்னத தெய்வம் நீரே
உயர்ந்த அடைக்கலமே நீர்
உயிரின் உறைவிடமே
Verse 1
காலங்கள் தொடங்கிடும் முன் கர்த்தராய் இருந்தவரே
பூமியை சுழலச் சொல்லி கட்டளை கொடுத்தவரே
வானத்தை விரிப்பதும் இஷ்டம்போல மடிப்பதும்
உமக்கு கடினமில்லை
மின்னலை கைகளுக்குள் மூடி வைத்து நடக்கிறீர்
உமக்கு நிகருமில்லையே
உம்மிடம் அனுமதி கேட்டே அணுவும் அசைகின்றதே
அண்டசராசரம் யாவும் உமக்குள் அடங்கிடுதே
Verse 2
எங்களை கிறிஸ்துவுக்குள்ளே தெரிந்துகொண்டவரும் நீர்
ரட்சிப்பின் திட்டங்களெல்லாம் முன்னரே அறிந்திருந்தீர்
கிறிஸ்துவை எங்களுக்காய் சாபமாக மாற்றியது
அன்பினை அறிவிக்கத்தான்
அன்றாடம் வெற்றிபெற பரிசுத்த ஆவி உண்டு
பேரன்பை நிரூபிக்கத்தானே
உமது மகிமைக்குத்தானே எங்களை படைத்துவிட்டீர்
எங்களை மகிமையில் சேர்க்க அன்புடன் அழைத்துவிட்டீர்
------x------x------x------
Chorus
Ulagai iratchippavare
Unnatha theivam neere
Uyarndha adaikkalame neer
Uyirin uraividame
Verse 1
Kaalangal thodangidum mun kartharaai irundhavare
Poomiyai suzhalach solli kattalai koduththavare
Vaanathai virippadhum ishtampola madippadhum
Umakku kadinamillai
Minnalai kaigalukkull moodi vaithu nadakkireer
Umakku nigarumillaiye
Ummidam anumathi kette anuvum asaigindradhe
Andasaraasaram yaavum umakkul adangidudhe
Verse 2
Engalai Kristhuvukkulle therinthukondavarum neer
Ratchippin thittangalellaam munnare arindhirundheer
Kristhuvai engalukkaai saabamaaga maatriyadhu
Anpinai arivikkathaan
Andraadham vetripera parisuththa aavi undu
Peranbai niroopikkaththane
Umadhu magimaikkuththane engalai padaithuvitteer
Engalai magimaiyil serkka anbudan azhaithuvitteer